வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை நடை வருகிற 10-ந்தேதி திறப்பு: 15-ந்தேதி சித்திரை விஷூ சிறப்பு பூஜை

Published On 2022-04-04 03:07 GMT   |   Update On 2022-04-04 03:07 GMT
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து சித்திரை விஷூ திருநாளில் சபரிமலை செல்ல பக்தர்கள் பலரும் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ பண்டிகைக்காக வருகிற 10-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.

10-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டாலும் மறுநாள் 11-ந் தேதி அதிகாலை முதல்தான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அன்று முதல் தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும். இதையடுத்து சித்திரை விஷூ திருநாளில் சபரிமலை செல்ல பக்தர்கள் பலரும் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.

இதையும் படிக்கலாம்....காஞ்சிபுரத்தில் பிரமாண்ட ஆஞ்சநேயர் ஆலயம்
Tags:    

Similar News