செய்திகள்
கைது

கும்மிடிப்பூண்டி அருகே தந்தை, மகன் மீது தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2021-01-14 03:54 GMT   |   Update On 2021-01-14 03:54 GMT
கும்மிடிப்பூண்டி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த தந்தை, மகனை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 60). இவர் தனது மகன் மோகன் (36) என்பவருடன், அதே கிராமத்தில் சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர், தந்தை மகன் ஆகிய 2 பேரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 18 வயதுடைய சிறுவன் மற்றும் கும்மிடிப்பூண்டி வெட்டுக்காலனியை சேர்ந்த அமர்கவி (20), அஜீத் என்ற கலையரசன் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News