லைஃப்ஸ்டைல்
பிள்ளைகளை கவனத்தோடு வளர்க்க அறிவுரைகள்

பிள்ளைகளை கவனத்தோடு வளர்க்க அறிவுரைகள்

Published On 2019-10-03 03:50 GMT   |   Update On 2019-10-03 03:50 GMT
கவனத்தோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த அறிவுரைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரு குழந்தை தானே நல்ல பாதுகாப்போடு, புத்திசாலியாய், பண்புகளோடு வளரும் வாய்ப்புகள் அதிகம். ஒரு தாயோ, தந்தையோ அதிக கவனத்தினை தர வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பெற்றோரும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். பிள்ளைகளும் அதிகம் தனித்தே இருக்கின்றனர். ஆகவே ஆய்வாளர்கள் கூறுவது அதாவது கவனத்தோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அந்த அறிவுரைகள்:

* பெற்றோர்கள் பிள்ளைகள் பேசுவதை கவனம் கொடுத்து கேட்க வேண்டும்.

* உங்கள் உணர்ச்சிகள். கோப தாபங்களை சட்டென வேகமாக உங்கள் பிள்ளைகள் மீது கொட்டி விடாதீர்கள். அது அவர்கள் மனதில் ஆழமான காயத்தினை ஏற்படுத்தி விடுகின்றதாம்.

* அன்போடும், ஒழுக்கத்தோடும் வளர்க்கப்பட்டாலே திடமான மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள்.

* இந்த கவனிப்பு பிள்ளைகள் - பெற்றோர் இடையே நன்றாக பேசி, பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்தும். வேகமான, கட்டுப்படாத குழந்தைகளாக இருக்க மாட்டார்கள்.

* பெற்றோர் தன் வேலை சுமை காரணமாக பிள்ளைகளை முறையாய் வளர்க்கவில்லை என்ற குற்ற உணர்வு இருக்காது.

* மன உளைச்சல் இரு தரப்பினருக்கும் இருக்காது. Maindful parenting எனப்படும் முறையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவதே சிறந்த முறை என ஆய்வுகள் கூறுகின்றன.
Tags:    

Similar News