உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் வைத்து விற்றவர் போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோடடை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் பதுக்கி விற்பதாக ஆலங்குடி டி.எஸ்.பி.-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் படி, அவரது போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அரசமரம் பஸ்ஸ்டாப் அருகே உள்ள மாமலையான் மளிகைகடையில் பதுக்கி விற்பனைசெய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைசியின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.