செய்திகள்
தற்கொலை

உத்தனப்பள்ளி அருகே வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-19 09:05 GMT   |   Update On 2021-03-19 09:05 GMT
உத்தனப்பள்ளி அருகே வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த தேவசானபள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). வேன் டிரைவர். இவர் முன்பு புனிதா (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். புனிதா அங்கன்வாடி பணியாளராக உள்ளார். சண்முகத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஒரு அறையில் தூங்கச்சென்றவர் காலையில் கதவு திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் தூக்குபோட்டு சண்முகம் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புனிதா உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News