தொழில்நுட்பம்
விவோ ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்களுக்கு வாரண்டியை நீட்டித்த விவோ

Published On 2021-05-14 11:05 GMT   |   Update On 2021-05-14 11:05 GMT
விவோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை நீட்டித்து வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

விவோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை 30 நாட்கள் நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை விவோ விற்பனை செய்த அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும். எனினும், இது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.



அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் வசிக்கும் விவோ வாடிக்கையாளர்களின் சாதனங்களுக்கு  வாரண்டி நிறைவுபெற இருக்கும் பட்சத்தில் அதனை 30 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக சர்வீஸ் மையங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். 

வாரண்டி நீட்டிப்பு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் சாதனங்களை வீட்டிற்கு வந்து சரி செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கால அவகாசம் விவோ மீண்டும் தனது வியாபாரத்தை துவங்கிய நாள் முதல் கணக்கிடப்படும் என விவோ அறிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News