செய்திகள்
சிங்கம்புணரி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை மறுதினம் (8-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வின் விநியோகம் இருக்காது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை மறுதினம் (8-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே சிங்கம்புணரி பகுதிகளான எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, உள்ளிட்ட ஊர்களின் சுற்றுவட்டார கிராமங்களில் 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்து உள்ளார்.