உள்ளூர் செய்திகள்
தாக்குதலில் காயமடைந்தவர்கள்.

பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் 3 பேர் மீது தாக்குதல் - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-05-05 08:11 GMT   |   Update On 2022-05-05 08:11 GMT
ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் 3 பேரை தாக்கிய தந்தை-மகன் உள்பட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 54). இவர் கால்நடை துறையில் உதவியாளராக உள்ளார்.இவரது மகன் சஞ்சய்.

 அதே தெருவை சேர்ந்தவர் இளையராஜா (35). இவருடைய மகனும், ராஜேந்திரன் மகனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.இருவருக்கும் பள்ளியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதை அறிந்த ராஜேந்திரன், இவரது தம்பி சுரேஷ் (38), ராஜேந்திரன் மகன் சஞ்சய் 3 பேரும் இளையராஜா வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த அவரது மனைவி இளவரசி (33), 

தாய் நாகம்மாள்(50), இளையராஜாஆகிய 3 பேரையும் உருட்டுக்க ட்டையால் சரமாரி தாக்கி விட்டு தப்பி்ஓ டிவிட்டனர் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் 
இதுகுறித்து இளவரசி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்

இவர்கள் மீது காவல் நிலையத்தில் பல புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News