செய்திகள்
கர்ப்பம்

காட்பாடியில் நண்பன் காதலியின் தோழியை கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2019-07-24 10:16 GMT   |   Update On 2019-07-24 10:16 GMT
காட்பாடியில் நண்பன் காதலியின் தோழியை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேலூர்:

காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் சந்தோஷ் (வயது 22). மாட்டு வண்டி ஓட்டி வருகிறார்.

இவரது நண்பர் ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலியை பார்க்க செல்லும் நண்பருடன் சந்தோசும் சென்று வந்தார்.

அப்போது அவரது நண்பரின் காதலி 20 வயது தோழியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து சந்தோஷ் இளம்பெண்ணுடன் தனிமையில் பேசினார். அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றி காட்பாடி போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மா வழக்குபதிவு செய்து தலைமறைவான சந்தோசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News