செய்திகள்
கோப்புபடம்

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

Published On 2021-07-18 09:45 GMT   |   Update On 2021-07-18 09:45 GMT
அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்று கொள்ளலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர பொதுமக்கள், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். 

இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் மற்றும் பங்கு தொகை ரூ.100 நுழைவு கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
 
இதன் மூலம் சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News