உள்ளூர் செய்திகள்
ஆம்பூரில் இன்று காலை வீடு புகுந்து திருடியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் நாச்சார குப்பம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜலகண்டன் (வயது50).
இவரது வீட்டில் இன்று காலை புகுந்த கொள்ளையன் பீரோவில் இருந்த பணம் 20 ஆயிரம் 2 சவரன் தங்க 2 செல்போன்களை திருடி கொண்டு தப்பி ஓடினான்.
இதைப்பார்த்த ஜலகண்டன் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.