உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் கொள்ளை

Published On 2022-01-13 09:01 GMT   |   Update On 2022-01-13 09:01 GMT
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு, சாந்தினி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், சாந்தினி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, குழந்தையுடன் சாந்தினி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

இதற்கிடையே இன்று வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சாந்தினிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

பின்னர் அவர் வந்து பார்த்த போது, வீட்டின்பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News