செய்திகள்
உயிரிழப்பு

ஆற்காடு அருகே கால்வாயில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

Published On 2021-10-08 10:24 GMT   |   Update On 2021-10-08 10:24 GMT
ஆற்காடு அருகே கால்வாயில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னகுக் குண்டி கிராமத்தை சேர்ந்தவர் தரணி (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை நிலத்திற்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் சின்னகுக் குண்டி ஆற்று தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கால்வாயில் தவறிவிழுந்து அடித்துச் சென்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தரணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News