செய்திகள்
நமீதா

தாமரை மலர்ந்தால் தமிழகம் வளரும்- நெல்லையில் நமீதா பிரசாரம்

Published On 2021-03-30 09:56 GMT   |   Update On 2021-03-30 09:56 GMT
மாநில அரசின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வர தாமரைக்கு வாக்களியுங்கள் என்று நடிகை நமீதா பேசியுள்ளார்.

நெல்லை:


நடிகை நமீதா இன்று நெல்லையில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

டவுன் வாகையடி முனை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து நமீதா பேசியதாவது:-

நெல்லையில் தாமரை மலர்ந்தால் தமிழகம் வளரும். மத்திய, மாநில அரசின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வர தாமரைக்கு வாக்களியுங்கள். நெல்லையில் பா.ஜனதா வெற்றி பெற்றால் ஹோமியோபதி கல்லூரி அமைக்கப்படும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப பெண்களுக்கு ரூ.1,500, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, ஒரு ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், பெண்களின் பணிச்சுமையை குறைக்க வாஷிங் மிஷின் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News