உள்ளூர் செய்திகள்
நுங்கம்பாக்கம் தூதகரத்துக்கு சென்று குடியுரிமை கேட்ட இலங்கை வாலிபர்
இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த இலங்கை வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜாய். 27 வயதான இவர் கடந்த 1999-ம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது படகில் பதுங்கி இருந்துள்ளார். அப்போது தமிழக மீனவர்கள் இங்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் தமிழகத்தில் பல இடங்களில் அவர் தங்கியிருந்தார். தற்போது ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்த அவர் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.