ஆன்மிகம்
திருப்பதி

இந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 கருட சேவை நிகழ்ச்சி

Published On 2021-08-13 08:51 GMT   |   Update On 2021-08-13 08:51 GMT
முதல் கருட சேவை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் கருட சேவை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) கருட பஞ்சமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து 2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட இரு கருட சேவை நிகழ்ச்சிகளில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News