வழிபாடு
முத்துக்குமாரசாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்.

பழனி முருகன் கோவில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம் நடக்கிறது

Published On 2022-01-17 09:11 GMT   |   Update On 2022-01-17 09:11 GMT
பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோவில் உள் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதேபோல் சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. அப்போது வழக்கமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு பதிலாக பெரியநாயகி அம்மன் கோவிலின் உள்பிரகாரத்தில் சிறிய தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் உலா வருவார்.

இதற்கிடையே தைப்பூச திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
Tags:    

Similar News