செய்திகள்
கைது

கமுதி அருகே மணல் கடத்திய 5 பேர் கைது

Published On 2021-02-21 13:22 GMT   |   Update On 2021-02-21 13:22 GMT
கமுதி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் மணல் கடத்தி வந்த 5 பேரை கைது செய்தனர்.
கமுதி:

கமுதி அருகே மண்டல மாணிக்கத்தை சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்தி சென்றனர். அப்போது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். 

இதில் காரில் மணல் கடத்தியது தெரியவந்தது. அப்போது காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி விட்டு காரில் வந்தவர்கள் தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். 

காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கமுதி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News