செய்திகள்
கேரளாவில் இன்று 20,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 181 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22484 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் தினசரி பாதிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 134861 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதில், 20,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 15.19 சதவீதமாக உள்ளது.
181 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22484 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22155 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,31,792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.