ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

கோவை சத்திரோடு அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-09-16 07:54 GMT   |   Update On 2021-09-16 07:54 GMT
கோவை சத்தி ரோட்டில் உள்ள அய்யா வைகுண்ட சிவபதி தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவை சத்தி ரோட்டில் உள்ள லட்சுமி கார்டன் அய்யா வைகுண்ட சிவபதி தேர்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றம், 7.30 மணிக்கு உகப்படிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

18-ந் தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, பிற்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 7.30 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார பணிவிடை, அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல், 19-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா பிரம்மனாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்னவாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

20-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்திலும், 21-ந் தேதி பூஞ்சரப்பா வாகனத்திலும், 22-ந் தேதி சர்ப வாகனத்திலும், 23-ந் தேதி கருட வாகனத்திலும், 24-ந் தேதி வெள்ளை குதிரை வாகனத்திலும், 25-ந் தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 26-ந் தேதி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

27-ந் தேதி மதியம் 1 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனம் ஏறி திருத்தேர் பிரவேசித்தலும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. இதில் சூலூர் டி.ஆர்.சந்திரசேகர், இருதயராஜ், கணேசன், பொன் செல்வராஜ், ஜெயராஜ், வேலுமயில், விஜயகாண்டிபன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலையில் திருஏடு வாசிப்பும், இரவு 12 மணிக்கு காளை வாகனத்தில் அம்மையப்பராக எழுந்தருளி பதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News