லைஃப்ஸ்டைல்
தயிர் வடை

மாலை நேரத்தில் சாப்பிட அருமையான தயிர் வடை

Published On 2020-06-09 11:07 GMT   |   Update On 2020-06-09 11:07 GMT
சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பக்கூடியது இந்த தயிர் வடை. மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு -   1 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி தூள்
தயிர் -  250 கிராம்
மிளகாய் பொடி -  தேவையான அளவு
வறுத்த சீரகம் பொடி -  தேவையான அளவு
கருப்பு உப்பு -  தேவையான அளவு
சீரகம் -  தேவையான அளவு
பெருங்காயம் -  தேவையான அளவு
கிஸ்மிஸ் -  தேவையான அளவு
உப்பு -  தேவையான அளவு
கிரீன் சட்னி -     1/2 கப்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் -  தேவையான அளவு
புளி சட்னி  -     1/2 தேக்கரண்டி



செய்முறை

உளுந்தம் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்

தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது உப்பு, மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுது தான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்  மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனைக்கவும். இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.

பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, சீரகம் பொடி, சிவப்பு மிளகாய் தூள், கிரீன் சட்னி, புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.

மேலே காராபூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்தும் பரிமாறலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News