தோஷ பரிகாரங்கள்
நஞ்சுண்டேஸ்வரர்

திருமணத்தடை, காலசர்ப்ப தோஷம் போக்கும் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்

Published On 2022-04-05 05:59 GMT   |   Update On 2022-04-05 05:59 GMT
பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் சரபங்கா நதிக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள சரபங்கா நதிக்கரை ஓரத்தில் 11 கோவில்கள் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இங்கு இறைவன், பாணலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.

பாற்கடலை கடைந்தபோது, வெளிப்பட்ட கொடிய நஞ்சை தானே உண்டு தேவர்களை காத்தார் சிவபெருமான். அவரை நஞ்சுண்டஈஸ்வரன் என்று வணங்கினர் தேவர்கள். அப்படிப்பட்ட நஞ்சுண்டேஸ்வரரை வணங்கிணால் காலசர்ப்ப தோஷம் நீங்கும். ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தியாகும். திருமணத்தடை விலகும்.

வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து பாலாபிஷேகம் செய்தால் அனைத்து வித தோஷங்களும் நீங்கும். தேவகிரி அம்பாளை வழிபட்டால் மாங்கல்யம் நிலைத்து, மங்களம் பெருகும் என்பது ஐதீகம். இதேபோல் சனிபெருமானுக்கு, இங்கு தனிக்கோவில் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பதும் நம்பிக்கை.
Tags:    

Similar News