செய்திகள்
கைது

மேலப்பாளையத்தில் 172 மதுபாட்டில்களுடன் 3 பேர் கைது

Published On 2021-07-20 12:09 GMT   |   Update On 2021-07-20 12:09 GMT
மேலப்பாளையத்தில் 172 மதுபாட்டில்களுடன் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

மேலப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலப்பாளையம் புறவழிச்சாலையில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்றுக் கொண்டிருந்தார். அவர் மானூரை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது34) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 66 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதே போல் குறிச்சி பகுதியில் மது விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மாடசாமி (50), மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 106 மதுபாட்டில்கள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News