செய்திகள்
மாணவி மாயம்

பிளஸ் 2 மாணவி மாயம்- போலீசார் விசாரணை

Published On 2020-12-02 10:21 GMT   |   Update On 2020-12-02 10:21 GMT
ராஜதானி அருகே பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

ராஜதானி அருகே சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மகள் சுவாதி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற சுவாதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பழனிசாமி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனிசாமி, ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுவாதியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News