இந்தியா
உச்சநீதிமன்றம்

நாளை முதல் நேரடி விசாரணை இல்லை - உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Published On 2022-01-02 17:53 GMT   |   Update On 2022-01-02 17:53 GMT
நாளை முதல் 2 வாரங்களுக்கு காணொலி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :

பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.  மேலும் ஒமைக்ரான் வைரஸ் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டன. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் நேரடி வழக்குகள் விசாரணை நடைபெறாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாளை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு காணொலி காட்சி  வாயிலாகவே வழக்கு விசாரணைகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News