செய்திகள்
தரமற்ற கட்டிடப்பணி-பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
3 மாதங்களாக சுவர்களுக்கு தண்ணீர் விடப்படாததால் சுவர்களின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப்பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் கட்டடம் தரமின்றி கட்டப்படுவதாக கூறி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஊரடங்குக்கு முன் பள்ளி கட்டுமான பணிகள் துவங்கின. ஊரடங்கு காரணமாக பணிகள் பாதியோடு கிடப்பில் போடப்பட்டன.
3 மாதங்களாக சுவர்களுக்கு தண்ணீர் விடப்படாததால் சுவர்களின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
சுவர்களுக்கு தண்ணீர் விடாமலேயே பணிகள் நடந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரத்துடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து சுவர்களுக்கு தண்ணீர் விடப்பட்டு அதன் பிறகு பணிகள் தொடர்ந்தன.