செய்திகள்
காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

காந்தி பிறந்தநாள்- தமிழக ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

Published On 2020-10-02 05:17 GMT   |   Update On 2020-10-02 05:17 GMT
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து காந்தியின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News