செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-09-11 11:35 GMT   |   Update On 2021-09-11 11:35 GMT
ஈரோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் 2-வது தெருவை சேர்ந் தவர் பிரவீன் (வயது20). இந்நிலையில் நேற்று பிரவீன் வீட்டில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பிரவீன் பெற்றோர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக சென்று பார்த்த போது பிரவீன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக்குள் சென்று பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News