செய்திகள்
விபத்து (கோப்புப்படம்)

பவானி அருகே புதிய காரில் பயணம் செய்த வாலிபர் பலி

Published On 2020-01-09 11:41 GMT   |   Update On 2020-01-09 11:41 GMT
பவானி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிபட்டி பூமணி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 35) பைக் மெக்கானிக்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைசாமி புதிய கார் வாங்கி இருந்தார். நேற்று மாலை காரில் பவானி வந்த துரைசாமி பிறகு அங்கிருந்து மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதிய கார் என்பதால் காரில் எண் இல்லை.

இந்த கார் பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஒரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் கார் நொறுங்கியது. வாலிபர் துரைசாமி இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பவானி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான துரைசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News