செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-09-30 09:06 GMT   |   Update On 2020-09-30 09:06 GMT
அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது. கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவில் பிரிவு என்பதே இருக்காது. கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை வரவேற்கிறேன். தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News