செய்திகள்
குளித்தலை அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
குளித்தலை அருகே புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை;
குளித்தலை சுங்ககேட் பகுதியில் பெட்டிக்கடையில் அனுமதியின்றி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கு தனது கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள சூரம்பட்டியை சேர்ந்த மதிவாணன்(வயது 41) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.