ஆன்மிகம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் அகிலத்திரட்டு உதய தினவிழா
அய்யா வைகுண்டசாமி எழுதிய அகிலத்திரட்டு ஏடுகளை எடுத்து அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்தோடு தலைமை பதியை சுற்றிவந்து, பள்ளியறை முன்பு வைத்து வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அய்யாவழி மக்களின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையை அய்யா வைகுண்டசாமி கார்த்திகை மாதம் 27-ந்தேதி எழுதத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 27-ந்தேதியை அகிலத்திரட்டு அம்மானை உதயநாள் விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று முன்தினம் அகிலத்திரட்டு அம்மானை உதயநாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்கினார்.
அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைச்செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். அய்யா வைகுண்டசாமி எழுதிய அகிலத்திரட்டு ஏடுகளை எடுத்து அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்தோடு தலைமை பதியை சுற்றிவந்து, பள்ளியறை முன்பு வைத்து வணங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.