செய்திகள்
அஷ்வின், ரோகித் சர்மா

சேப்பாக்கம் டெஸ்டில் அசத்தல்: ஐசிசி தரவரிசையில் ரோகித் சர்மா, அஷ்வின், பண்ட் முன்னேற்றம்

Published On 2021-02-17 10:25 GMT   |   Update On 2021-02-17 10:25 GMT
சேப்பாக்கம் 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அஷ்வின், ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 161 ரன்கள் விளாசினார். அஷ்வின் 8 விக்கெட் வீழ்த்தியதுடன், சதம் அடித்தார். ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார்.

சதம் விளாசிய ரோகித் சர்மா 14-வது இடத்திற்கு முன்னேறினார். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அவரது சிறந்த இடம் இதுவாகும்.

சதம் அடித்த அஷ்வின் 14 இடங்கள் முன்னேறி 81-வது இடத்தில் உள்ளார். 8 விக்கெட் வீழ்த்தியதால் பந்து வீச்சு தரவரிசையில் 7-வது இடத்தில் நீடிக்கிறார். 33 புள்ளிகள் அதிகம் பெற்ற அஷ்வின் 6-வது இடத்தில் இருக்கும் ஸ்டூவர்ட் பிராட்டை விட 3 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

ரிஷப் பண்ட் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அவரின் சிறந்த இடமாகும். முதல் இடத்தில் கேன் வில்லியம்சன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்திலும், லாபஸ்சேன் 3-வது இடத்திலும், ஜோ ரூட் 4-வது இடத்திலும், விராட் கோலி  5-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News