ஆட்டோமொபைல்
ஸ்கோடா கரோக்

மீண்டும் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கார்?

Published On 2021-01-25 11:06 GMT   |   Update On 2021-01-25 11:06 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் எஸ்யுவி மாடல் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

ஸ்கோடா இந்தியா நிறுவனம் புதிய கரோக் எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கோடியக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஸ்கோடா கரோக் 1000 யூனிட்கள் இந்திய விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டது.

விற்பனை துவங்கிய சில மாதங்களில் இந்த மாடல் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா நிறுவனம் தனது கரோக் எஸ்யுவி-யை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.



மேலும் கரோக் எஸ்யுவி அடுத்தக்கட்ட யூனிட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கென ஸ்கோடா நிறுவனம் கரோக் மாடலை CKD முறையில் பாகங்களை இறக்குமதி செய்யலாம். மேலும் இவை இந்தியா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. கரோக் எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Tags:    

Similar News