உள்ளூர் செய்திகள்
வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா

Published On 2022-01-29 08:01 GMT   |   Update On 2022-01-29 10:05 GMT
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த வைகோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக ம.தி.மு.க.வினர் கூறும்போது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பின்னர் அது அதிகரித்து சளி தொல்லை அதிகமானதாகவும் தெரிவித்தனர். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பதாகவும்” அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News