செய்திகள்
மிரட்டல்

திருபுவனை அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்- 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-11-09 09:33 GMT   |   Update On 2019-11-09 09:33 GMT
திருபுவனை அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருபுவனை:

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் டி.பி.ஜி. நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் மாஸ்வரதன் (வயது 19). இவர்களது வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இதையொட்டி நேற்று மாஸ் வரதன் கட்டுமான வேலைக்காக மதகடிப்பட்டில் பிளாஸ்டிக் குழாய்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அருணாசலம், பாலகணேசன், தினேஷ், கண்ணதாசன் ஆகியோர் மாஸ் வரதனை வழிமறித்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் குழாய்களை எப்படி கொண்டு செல்லலாம்? என கூறி தகராறு செய்தனர்.

இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த அருணாசலம் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து மாஸ்வரதனை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாஸ் வரதன் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், ஏட்டு வரதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருணாசலம் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News