செய்திகள்
கைது

அம்பை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-10-23 10:27 GMT   |   Update On 2021-10-23 10:27 GMT
அம்பை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

அம்பை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சைமன் மற்றும் போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சாட்டுப்பத்து கிராமத்தை சேர்ந்த வெயில்முத்து (23), கருத்தப்பாண்டி என்ற சரவணன் (20) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் ½ கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News