செய்திகள்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-09-30 05:42 GMT   |   Update On 2020-09-30 05:42 GMT
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:

இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் SUMEET URBAN SERVICES 8 ஆண்டுக்கு குப்பை சேகரிக்கும். 62 வார்டுகளில் 16,621 தெருக்களில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபடும்.

வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News