செய்திகள்
மின்சாரம் பாய்ந்து ஜே.சி.பி. டிரைவர் உயிரிழப்பு
திருமண நாளன்று ஜே.சி.பி. டிரைவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடபழனி குமரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 40). ஜே.சி.பி டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்கிரமனுக்கு நேற்று திருமண நாள். இதனால் மனைவி, குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாட வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அரச்சலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வீட்டிற்கு முன் பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விக்ரமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்ரமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்ரமன் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நாளன்று ஜே.சி.பி. டிரைவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடபழனி குமரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 40). ஜே.சி.பி டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்கிரமனுக்கு நேற்று திருமண நாள். இதனால் மனைவி, குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாட வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அரச்சலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வீட்டிற்கு முன் பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விக்ரமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்ரமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்ரமன் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நாளன்று ஜே.சி.பி. டிரைவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.