செய்திகள்
விபத்து

புளியங்குடி அருகே மரத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலி

Published On 2020-01-11 08:26 GMT   |   Update On 2020-01-11 08:26 GMT
புளியங்குடி அருகே மரத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியங்குடி:

புளியங்குடி அருணாசல முதலியார் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருமலைக்குமார் (வயது 25). இவர் புளியங்குடி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று திருமலைக்குமார் மோட்டார் சைக்கிளில் சிந்தாமணியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் திருமலைகுமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை திருமலைக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News