ஆன்மிகம்
நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடி இறக்கும் நிகழ்ச்சி

Published On 2021-01-29 03:49 GMT   |   Update On 2021-01-29 03:49 GMT
நாகூர் தர்கா கந்தூரி விழா முடிவடைந்ததையொட்டி கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந் சந்தன கூடு ஊர்வலமும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கந்தூரியின் நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
Tags:    

Similar News