செய்திகள்
பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன்

பினராயி விஜயன் பதவி விலக கோரி போராட்டம்- கேரள பா.ஜனதா தலைவர் கைது

Published On 2020-08-25 02:47 GMT   |   Update On 2020-08-25 02:47 GMT
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் நடந்த தங்கம் கடத்தல் விவகாரம் பெரும் அரசியல் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்தில் முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதால் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என பா.ஜனதா போர்க்கொடி தூக்கியுள்ளது. இதை வலியுறுத்தி கேரள சட்டசபை முன் நேற்று திடீரென பா.ஜனதா தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கம் கடத்தல் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாக முதல்-மந்திரி அலுவலகம் மாறி விட்டதாக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு உண்டானது. போலீசார் அவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்தினார்கள். பா. ஜனதா மாநில தலைவர் கே.சுரேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தெரிவிக்கையில், முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலகும் வரை பா.ஜனதாவின் போராட்டம் தொடரும் என்றார்.
Tags:    

Similar News