ஆன்மிகம்
கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் நெய்குள தரிசனம்

கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் நெய்குள தரிசனம்

Published On 2021-03-02 06:39 GMT   |   Update On 2021-03-02 06:39 GMT
கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் நெய்குள தரிசனம் நடந்தது. இதில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த நெய் குளத்தில், அம்மனின் முகம் தெரிவது சிறப்பாகும்.
கீழ்வேளூரில் அஞ்சுவட்டத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமியையொட்டி 108 பால்குட ஊர்வலம் நடந்தது

 இதை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெய்குள தரிசனம் நடந்தது. இதில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த நெய் குளத்தில், அம்மனின் முகம் தெரிவது சிறப்பாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News