ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் வசந்த உற்சவம் 24-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

Published On 2021-04-21 09:08 GMT   |   Update On 2021-04-21 09:08 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான வசந்த உற்சவம் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக இரண்டாவது நாள் நடக்கும் தங்கரதம் ரத்து செய்யப்படுகிறது. விழாவையொட்டி கோவில் கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சாமிக்கு திருமஞ்சனமும், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் செய்யப்படுகிறது.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.

வசந்த உற்சவம் காரணமாக ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
Tags:    

Similar News