ஆன்மிகம்
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் லட்சதீப விழா

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் லட்சதீப விழா

Published On 2021-08-16 05:54 GMT   |   Update On 2021-08-16 05:54 GMT
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சிவபெருமானும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தரிசனம் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தன.
ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை மற்றும் லட்சதீப விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கோவில் வளாகம் சுற்றிலும் உள்ள அனைத்து சன்னதிகளிலும் லட்சதீபங்கள் ஏற்றப்பட்டன. உற்சவர் சுந்தரமூர்த்தி நாயனார், இந்திர பகவான் வெள்ளையானையில் வலம் வருவது போலவும், சிவபெருமானும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தரிசனம் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருந்தன.
Tags:    

Similar News