செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு

Published On 2021-05-08 03:14 GMT   |   Update On 2021-05-08 10:01 GMT
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: 

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

• தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. 
 
• உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி 

• காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும். 

• அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News