செய்திகள்
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு : 3 விஞ்ஞானிகள் பகிர்வு
மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்:
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி விஞ்ஞானிகள் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் பி. குட்எனாஃப், அகிரா யோஷினோ ஆகியோர் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.