செய்திகள்
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

கந்தகார் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Published On 2021-10-15 23:30 GMT   |   Update On 2021-10-15 23:30 GMT
வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதியில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். இதை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், கந்தகார் மசூதி குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும், அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் கந்தகார் மசூதி குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News