உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

திருவள்ளூர் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு

Published On 2022-01-11 08:23 GMT   |   Update On 2022-01-11 08:23 GMT
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளுடன் பேனர் ஒன்று அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் அ.தி.மு.க. நிர்வாகிகளான வெற்றிச்செல்வன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, துணை செயலாளர் எழில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் தியாகு, ஜோதி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News