செய்திகள்
விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து தே.மு.தி.க. தலைமைக்கழகம் கூறியிருப்பதாவது:
விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து தே.மு.தி.க. தலைமைக்கழகம் கூறியிருப்பதாவது:
விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.